top of page



உப்புநாய்கள் நாவலிலிருந்து ஒரு பகுதி
செல்வி தவுடு மற்றும் சிலரின் உறங்கும் அறை. ”துருப்பிடித்த இரும்புக் கோடுகளினூடே சிதறும் பயனற்ற உப்புநீர்ப் பறவைகள். ” - தருமு சிவராம். வெயில் குடித்து எரியும் இந்தச்சாலையின் இரைச்சலில், செல்விக்குக் கடந்த காலத்தின் நினைவுகள் இப்போது எழுந்தோடுகின்றன. சற்றுமுன்பாக, இப்பெரிய கூட்டத்திற்குள் எப்போதும்போல் எளிதில் நுழைந்து பொருளோடு வெளியேறிவிடலாமென்கிற அவளின் நம்பிக்கை பொய்யாகிவிட்டிருந்தது. வழக்கமாய், இடதுகையை மட்டுமே பர்சுகளை எடுக்க பழக்கப்படுத்தி இருந்தவள், அதற்கு எசவில்

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 10, 2025


கடவுளெனும் ஆத்ம நண்பன்
1 இருள் அம்மணங்கள் ஆடிக் கொண்டிருப்பதுமாய்பிரித்தறிய முடியாத ஆயிரம் நிறங்களும் குணங்களும் உண்டு.கொஞ்சம் மதுவும், உடன் சில நண்பர்களுமாய் வீதியில் இறங்கினால்நள்ளிரவில் எல்லாக் கோவில் வாசல்களிலும் கடவுள்கள் தட்டாங்கல் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். 2 நீ கொலை செய்ய முடியாத என் கனவில் தான் கடவுள் பாதுகாப்பாய் இருக்கிறார். அவருக்கு காதலையும் காதலிகளையும் பிடிக்காதென்பதாலேயே அவரின் காதலிகளையும் சேர்த்து நான் காதலிக்க வேண்டியுள்ளது. 3 நள்ளிரவில் மேன்ஷன் ஹவுஸ் குடி

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 7, 2025


கோவை சம்பவம் : யார் மீது குற்றம் சுமத்துவது?
கோவை விமான நிலையத்திற்கு அருகே தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் மீது, மது வெறியிலிருந்த மூன்று ஆண்கள் பாலியல் வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணின் நண்பரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஏராளமான கருத்து விவாதங்கள் வழமைபோல் பொதுவெளியில் கிளம்பியுள்ளன. அந்த நேரத்தில் அந்தப் பெண் ஏன் தனது ஆண் நண்பருடன் அங்கே செல்ல வேண்டும்.? குடி போதையில் நிதானமிழந்து??? அவர்கள் மூன்று பேரும் அந்தப் பெண்ணின் மீது அ

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 4, 2025


கடவுளென்னும் ஆத்ம நண்பன்
17 E க்காக காத்திருக்கும் கடவுள்… பயணச் சீட்டில்லாமல் மாநகரப் பேருந்தில் பயணிப்பது சுவாரஸ்யம். நானும் திருமிகு கடவுளும் கொதிக்கும் ஒரு பிற்பகலில் பிராட்வே வரைச் செல்லும் 17 ஈ பேருந்தில் பயணத்திக் கொண்டிருந்தோம். மூர் மார்க்கெட்டில் பழைய வாட்சுகளை விற்கும் அவரின் முன்னால் காதலியைச் சந்திக்க வேண்டி அவ்வப்போது நாங்கள் செல்வது வழக்கம். அவருக்கு புன்னகையையும் எனக்கு முத்தங்களையும் தருமவள் முன்பு ஒரு குஷ்ட ரோகி. காதல் குறித்து எங்களில் யாருக்கும் தெளிவான தீர்மானங்களில்லை.ஆனாலும் க

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 4, 2025


நேத்ராவதி
1 குளிர் விலகாத அந்தக் காலையில் பேருந்து அவனை இறக்கிவிட்டபோது தலையில் பனிக்குல்லா அணிந்த மனிதர்கள் நடுங்கியபடி மஞ்சுநாத சுவாமியின் கோவிலை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டனர். பெங்களூருக்குச் செல்லும் பேருந்தொன்று பெரும் உறுமலோடு அந்தக் கூட்டத்தைத் தாண்டிச் சென்றது. ஆலயத்தின் ஒலிப்பெருக்கியிலிருந்து வந்த பாடலை கேட்டபடியே நடந்தவனின் கையிலிருந்த தோள்பையில் ஒற்றை வேட்டியும் மங்கிய நிறத்திலான ஒரு ஜிப்பாவுடன் சேர்த்து தாத்தா தந்துவிட்டுப் போன உடுக்கையுமிருந்தது. கோவில் நகரங்களு

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 3, 2025


இந்த தருணத்தில் வாழ்தல் - 2000 ற்குப் பிறகான மகிழ்ச்சியான திரைப்படங்கள்.
ஓம் ஷாந்தி ஓம் திரைப்படத்தில் ஷாருக்கான் பேசும் சிறப்பான வசனம் ஒன்று உண்டு. ‘நண்பா எல்லாக் கதைகளும் இறுதியில் மகிழ்ச்சியான முடிவைக்...

லக்ஷ்மி சரவணகுமார்
Oct 5, 2025


ஷ்யாம் பெனகலின் இரண்டு திரைப்படங்கள்.
’புரட்சி என்பது ஒற்றைக் குறிக்கோள் அல்ல, மாறாக ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு நாளும் சாதிக்க முடிகிற லட்சக்கணக்கான குறிக்கோளை உடையது.’...

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 19, 2025


எல்லா வேட்டைகளின் முடிவையும் காடுதான் தீர்மானிக்கிறது.
திண்டுகல்லில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக நண்பர்களுடன் பயணிக்கையில் தந்தை மகன் உறவில் இருக்கக் கூடிய அதீத அன்பைக் குறித்தும் வெறுப்பைக்...

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 1, 2025


பன்றி வேட்டை
பகுதி – 7 ஊர்க்காரர்களின் மனதில் விதைக்கப்பட்டிருந்த ஜமீன் குடும்பத்தின் மீதான பழியுணர்ச்சி, சுப்புராஜின் மகன் கொலையுண்டபோதோ, பழனி...

லக்ஷ்மி சரவணகுமார்
Jun 29, 2025


அப்போதும் அவள் கருவுற்றிருந்தாள்.
சென்னை புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் வீற்றிருக்கும் அருவி கருத்தரிப்பு மையத்தின்' தரைத்தளத்திற்கு கீழிருந்த ...

லக்ஷ்மி சரவணகுமார்
Jun 23, 2025
bottom of page