top of page



பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
சிவபாலனின் வருகையால் மனம் நிறைந்தது. கடந்த வருடம் முதல் முறையாக அவனை சந்தித்தபோது இத்தனை நெருக்கமானவனாக மாறக்கூடுவானென சிறிதும் ஊகித்திருக்கவில்லை. எனக்கு மகள் பிறந்திருக்கிறாளென்கிற செய்தி அறிந்து மலேசியாவின் ஈப்போவிலிருந்து வந்திருந்தான். மாற்று சமூகத்தில் திருமணம் செய்த காரணத்தால் நானும் என் மனைவியும் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தோம். இந்த பெருநகரத்தில் நண்பர்களை மட்டுமே உறவுகளாகக் கொண்டு வாழ்வைத் துவங்கியபோது அன்றாடத்தை சமாளிக்கவே சவாலாக இருந

லக்ஷ்மி சரவணகுமார்
Feb 24


பாண்டியக் கண்ணனின் மேடை.
“சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கற்சுவரோ கம்பி வேலியோ அல்ல. சாதி என்பது ஒரு கருத்து நிலை, ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பெளதிகத் தன்மையை அழிக்கும் செயல் அல்ல, மக்களின் கருத்து நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்.” - பாபாசாகேப் அம்பேத்கர் பாண்டியக் கண்ணனின் சலவான் எனக்குப் பிடித்தமான நாவல்களில் ஒன்று. பல்வேறு இடங்களில் அந்த நாவலைக் குறித்து குறிப்பிட்டு பேசியிருக்கிறேன். திருமங்கலம் விருதுநகர் பகுதியில் வாழும் குறவர் மக்களின் வாழ்க்கைப்

லக்ஷ்மி சரவணகுமார்
Feb 24


இன்றைய நாவல்கள்: ஒன்று.காடு இழந்த மக்கள், பயம் இழந்த இரவு.
சோழன் வாலறிவன் எழுதியது. ஒரு கிராமத்தை அடக்க துப்பாக்கி தேவையில்லை. ஒரு மனிதனை “ஐயா” என்று அழைக்க ஆரம்பித்தால் போதும். அந்த அழைப்பு மரியாதையால் தொடங்குவதில்லை; பயத்தால் தொடங்குகிறது. பிறகு அது பழக்கமாகிறது. இறுதியில் அது இயற்கையின் சட்டம் போலத் தோற்றம் கொள்கிறது. மனிதன் ஒருவரை மதிக்க ஆரம்பிப்பதற்கு முன் அஞ்சத் தொடங்குகிறான்; அந்த அச்சம் நீண்டு மரியாதை போல முகமூடி மாட்டிக்கொள்கிறது. இந்த நாவலில் நாயகன் ஒருவன் இல்லை. ஒரு சமூகமே நாயகன். பளியர்களின் சமூகமே அந்த நாயகம். அவர்களின்

லக்ஷ்மி சரவணகுமார்
Feb 10


ஒன்றைப் புதிதாய்த் துவங்குதல்
2025 மே மாதம் நான் எழுதி இயக்கியிருக்கும் லிங்கம் தொடர் வெளியாவதாக இருந்தது. பின்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போனது. ஆகஸ்ட் அக்டோபராகி பின்பு 2026 ஜனவரி என்றாகி இப்பொழுது ஏப்ரல் அல்லது மே மாதத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு முதல் பட இயக்குநருடைய மனநிலை இந்த காலகட்டத்தில் எப்படி இருக்கும் என்பதை சினிமாவில் இருக்கும் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். 35 வயதில் ஒப்பந்தமாகி நாற்பது வயதை இன்னும் சில மாதங்களில் நிறைவு செய்யவிருக்கும் எனக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடிக

லக்ஷ்மி சரவணகுமார்
Feb 8


பிறழ் – டோபமைன் தலைமுறையிலிருந்து ஓர் கதை
எங்கோ ஒரு நேர்காணலில் ஜெயகாந்தன் சொன்ன இந்த வரிகளை நினைத்துக் கொள்கிறேன். அவரது கதைகளில் பெரும்பாலானவையோடு அல்லது முழுமையாகவே எனக்கு உவப்பில்லை. ஆனால் இந்த வரிகள் ஆழமாக எனக்குள் படிந்துவிட்டது. ‘எதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வையுங்கள், கடவுள், தத்துவம், கலை இப்படி ஏதாவது ஒன்றில். நம்பிக்கையோடு இருப்பது ஒரு தனிமனிதனுக்கு முக்கியம்.’ இரண்டாயிரத்திற்குப் பிறகான தலைமுறையினர் தனது முந்தைய தலைமுறையினரிடமிருந்து பல்வேறு வகைகளில் துண்டித்துக் கொண்டனர். இன்றைக்கு லட்சியவாதம் குறித்

லக்ஷ்மி சரவணகுமார்
Feb 3


நாவல் என்பது கூட்டு நினைவுகளின் தொகுப்பு : அலேன் மபாங்குவின் முள்ளம்பன்றியின் தன் வரலாற்றுக் குறிப்பு.
ரமேஷ் ப்ரேதன் ஒரு நேர்காணல் இப்படிச் சொல்வார் ‘ஒரு நாவல் அளவுக்கு எழுதும் செய்திகளை ஒரு சிறுகதையிலும், ஒரு சிறுகதையளவிற்கு எழுதும் செய்திகளை கவிதையிலும் பல்லாயிரம் பக்கங்கள் நீளக்கூடிய கதைகளை சிறிய நாவலிலும் எழுதிப் பார்க்க வேண்டும். அதுதான் எழுத்தாளன் மொழியில் நிகழ்த்தும் சாகசம்.’ அலேன் மபாங்குவின் இந்த நாவல் ஆப்பிரிக்காவின் வாய்மொழிக் கதைகளையும் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் மையமாகக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பல நூறு பக்கங்களுக்கு விரிய சாத்தியமுள்ள இந்தக் கதையை நுணுக

லக்ஷ்மி சரவணகுமார்
Feb 2


The wolf moon
” Herr God, Herr Lucifer Beware Beware. Out of the ash I rise with my red hair And I eat men like air.” Lady Lazarus By Sylvia Plath 1 வியன்னாவுக்கு அருகிலிருக்கும் வைடன் என்னும் கிராமத்திலிருந்து தேசாந்திரியாய் தனது பயணத்தைத் தொடங்கிய ஜேகப் ஸ்டேன்ஸ், 1858 வது வருடம் சில ஃப்ரெஞ்சு அதிகாரிகளுடன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தபோது ஐம்பது வயதை நெருங்கியிருந்தார். பதினொன்றாவது வயதில் இசைக்கலைஞராக தன் வாழ்வைத் தொடங்கிய ஸ்டேன்ஸ் சிறு வயதில் தேவாலயத்

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 28, 2025


எந்த நிழலில் இளைபாறுகிறோம் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன.
“there is no glory in punishing” ― Michel Foucault, Discipline and Punish: The Birth of the Prison 2024 ம் வருடத்தின் மார்ச் மாதத்தில் ஒரு நாள் சரியாக லிங்கம் தொடருக்கான படப்பிடிப்புத் துவங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக திரு செல்வம் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து எனக்கொரு செய்தி கிடைத்தது. ஓரிரு நாட்களில் அவர் பரோலில் வரும்போது என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். நானும் உடனடியாக சம்மதித்தேன். இந்தத் தொடரை இயக்குவதற்காக நிறைய பேரை சந்தித்து உரையாடியிர

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 24, 2025


ரெண்டாம் ஆட்டம் நாவலிலிருந்து சிறிய பகுதி
29 ஜெகதி வறண்ட நிலத்தில் பூக்கும் மலர்களுக்குத் தனித்துவமான வசீகரமுண்டு. ஜெகதி அப்படியானதொரு மலர். எதிரிலிருப்பவர்களைத் பார்வையாலேயே வீழ்த்திவிடும் விசேஷமான கண்களை கடவுள் அவளுக்குப் பரிசளித்திருந்தார். சராசரி பெண்களை விட சற்றே உயரமும் இறுகிய உடலும் கொண்ட அவள் மதுரைக்குக் குடிவந்தது 2012 ம் வாக்கில்தான். ராமநாதபுரத்திற்கு அருகில் பாண்டியூரைச் சொந்த ஊராகக் கொண்டவள் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ஸி ஒன்றை நடத்தி வந்தாள். மலேசியா சிங்கப்பூருக்கு வீட

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 7, 2025


கொமோரா நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி
Children village. - 2 பால்யம் என்பதே நினைவின் வலிகள் தான் அவனுக்கு, தனிமையின் அர்த்தம் புரிய சாத்தியமில்லாத வயதில் தனிமைப்படும் குழந்தை இந்த உலகை அச்சத்தோடு மட்டுமே பார்க்கும். அச்சம் தான் எல்லா வன்முறைகளுக்குமான துவக்கம். அம்மா எதற்காக தன்னை இந்த தன்னந்தனிக் காட்டில் விட்டுப்போனாள் என யோசிக்கிற நாளில் எல்லாம் உலகின் அத்தனை அம்மாக்கள் மீதும் வெறுப்பு உண்டானது. தாய்மையின் ஆழமான வெற்றிடத்தை ரோஸி ஆண்ட்டியின் அன்பு மட்டுமே நிரப்பியது. ஆனாலும் அந்த அன்பு அவனுக்கு மட்

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 6, 2025
bottom of page