top of page



‘த்தூ...’
( 2008 வது வருடம் வெளியான சிறுகதை) ‘த்தூ...’ என யாரோ யாரையாரையோ திட்டிக் கொண்டிருந்தது அந்த வீதியிலிருந்த யாவரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்ததைப் போலவேதான் அவனையும் திரும்பிப்பார்க்க வைத்தது. மாநகராட்சி கட்டணக் கழிப்பறையை ஒட்டி இன்னும் சரியாய்ச் சொல்ல வேண்டுமானால் சற்றே இடது புறம் அப்பால் நின்று சாலையோரத்தில் சிறுநீர் கழித்த ஒருவனை கழிப்பறைக்குக் காவலிலிருந்த பெண் திட்டிக் கொண்டிருந்ததுதான் அத்தனை பெரிய சத்தமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவள் உதிர்த்த இன்னபிற

லக்ஷ்மி சரவணகுமார்
3 minutes ago


போர்க்குதிரை
பதினொரு கதைகளையுடைய 'போர்க்குதிரை' எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின ஏழாவது சிறுகதைத் தொகுப்பு. சிறுகதைகள்தான் தனக்கான அடையாளமாகத் தோன்றுகிறது என்று கூறும் லஷ்மி, தனது நண்பர்களுடனான உரையாடல்கள் மற்றும் பயணங்கள் மூலமாகவே தனது கதைவெளி உருக்கொள்வதாக முன்னுரையில் தெரிவிக்கிறார். அதனை உறுதிப்படுத்துவது போலவே தொகுப்பின் கதைகளும் அமைந்திருக்கின்றன. தொகுப்பிலுள்ள கதைகளில் 'ரகசியத்தின் அரூப நிழல்கள்' மட்டுமே நான் முன்னரே வாசித்த கதை. மலைகள்.காம் இணைய இதழில் வெளிவந்த அந்தக் கதையே தொகுப்பில்

லக்ஷ்மி சரவணகுமார்
1 day ago


ரெண்டாம் ஆட்டம்
ரெண்டாம் ஆட்டம் லஷ்மி சரவணக்குமார் நாவல் விகடன் பிரசுரம் ஜனவரி 2022 பக்கம் 432 விலை 650 1960 களுக்குப் பிறகு மதுரை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது, மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்கள் எப்படி மதுரையை நகரமாக மாற்றுகின்றன, அதற்காக அந்த கிராம மக்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்து மதுரையை எவ்வாறு பெருநகரமாக்கி மக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது என்ற அடிப்படையில் இக்கதை எளிய மக்களின் வாழ்வியலை, எளிய மக்களின் வலியை, பழிக்குப் பழிவாங்கும் உணர்வை, துரோகத்தை, வஞ்சகத்தை நமக்குள் கடத்துகிறது. 196

லக்ஷ்மி சரவணகுமார்
1 day ago


உரித்துக்காட்டாத எழுத்தும்,என் எண்ணங்களின் குரலும் : கொமோரா
முழுமைக்கான மனித உணர்வில் வன்முறையும் நம்மோடு பயணித்து கொண்டிருக்கையில்,அதன் நீட்சி எப்படி முழுதாய் இருள் சூழ்ந்து இருக்கமாய் இருக்கிறது என்பதே தணல் அணையாத கொமோரா. பிரதான மையமான Character-இன் (பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை) பார்வையில் நம்மை இழுத்து அவனின் உணர்வுகளை பிரதிபலிக்க செய்த இடத்தில் இந்த புத்தகம் நிமிர்கிறது. குரூரம்,வன்முறையை தனக்கான பாதையாய் கையில் எடுத்து,திசை இரண்டைப் பிணைத்து (கம்போடியா,மதுரை) அதன் விஷயங்களை உடைக்கும் இடம் பிரமாதம். நிரம்பிவிடாத வாழ்க்கை

லக்ஷ்மி சரவணகுமார்
1 day ago


எஸ். திருநாவுக்கரசிற்குஇருபத்தைந்து வயதானபோது...
2007 ஜனவரி மாதம் புதியகாற்று இதழில் வெளியான எனது முதல் சிறுகதை. மிகச் சரியாகச் சொல்வதானால், அது வெம்மையற்ற உலர் தன்மையுடைய காற்றடி காலத்தின் வழக்கமானதொரு செவ்வாய்க்கிழமை. இயல்புக்கு மீறிய நாவறட்சி தொண்டையிலிருந்து பிரியும் உடலை மேலும் மேலுமென துன்புறுத்தியபடி உதிரக்கரைசலில் பெருகிக் கொண்டிருந்தது வெறுமை ஓர் அருவமான தொடர்ச்சியாய். அந்தப் பேருந்தில் ஏறிய போது சுவாமிநாதனின் மகனான திருநாவுக்கரசு கறுப்பு நிற கார்கோ பேன்ட்டும், வெளிர் சாம்பல் நிற ஆரோ சட்டையும் அணிந்திருந்தான். குற

லக்ஷ்மி சரவணகுமார்
1 day ago
bottom of page