top of page



எந்த நிழலில் இளைபாறுகிறோம் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன.
“there is no glory in punishing” ― Michel Foucault, Discipline and Punish: The Birth of the Prison 2024 ம் வருடத்தின் மார்ச் மாதத்தில் ஒரு நாள் சரியாக லிங்கம் தொடருக்கான படப்பிடிப்புத் துவங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக திரு செல்வம் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து எனக்கொரு செய்தி கிடைத்தது. ஓரிரு நாட்களில் அவர் பரோலில் வரும்போது என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். நானும் உடனடியாக சம்மதித்தேன். இந்தத் தொடரை இயக்குவதற்காக நிறைய பேரை சந்தித்து உரையாடியிர

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 24, 2025


ரெண்டாம் ஆட்டம் நாவலிலிருந்து சிறிய பகுதி
29 ஜெகதி வறண்ட நிலத்தில் பூக்கும் மலர்களுக்குத் தனித்துவமான வசீகரமுண்டு. ஜெகதி அப்படியானதொரு மலர். எதிரிலிருப்பவர்களைத் பார்வையாலேயே வீழ்த்திவிடும் விசேஷமான கண்களை கடவுள் அவளுக்குப் பரிசளித்திருந்தார். சராசரி பெண்களை விட சற்றே உயரமும் இறுகிய உடலும் கொண்ட அவள் மதுரைக்குக் குடிவந்தது 2012 ம் வாக்கில்தான். ராமநாதபுரத்திற்கு அருகில் பாண்டியூரைச் சொந்த ஊராகக் கொண்டவள் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ஸி ஒன்றை நடத்தி வந்தாள். மலேசியா சிங்கப்பூருக்கு வீட

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 7, 2025


கொமோரா நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி
Children village. - 2 பால்யம் என்பதே நினைவின் வலிகள் தான் அவனுக்கு, தனிமையின் அர்த்தம் புரிய சாத்தியமில்லாத வயதில் தனிமைப்படும் குழந்தை இந்த உலகை அச்சத்தோடு மட்டுமே பார்க்கும். அச்சம் தான் எல்லா வன்முறைகளுக்குமான துவக்கம். அம்மா எதற்காக தன்னை இந்த தன்னந்தனிக் காட்டில் விட்டுப்போனாள் என யோசிக்கிற நாளில் எல்லாம் உலகின் அத்தனை அம்மாக்கள் மீதும் வெறுப்பு உண்டானது. தாய்மையின் ஆழமான வெற்றிடத்தை ரோஸி ஆண்ட்டியின் அன்பு மட்டுமே நிரப்பியது. ஆனாலும் அந்த அன்பு அவனுக்கு மட்

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 6, 2025


பன்றி வேட்டை நாவலுக்கு வந்த ஒரு வாசிப்புக் குறிப்பு.
எல்லா வேட்டைகளின் முடிவையும் காடு தான் தீர்மானிக்கிறது என்று இந்த புத்தகத்தின் அட்டை படத்தில் தெரிவித்திருக்கிறார். வேட்டையில் தொடங்கி வேட்டையில் முடிவடைகிறது இந்த கதைக்களம். நாவலை வாசிக்க வாசிக்க ஒருவேளை இந்த நாவல் திரைப்படமாக வெளிவந்தால் எப்படி இருக்கும் என்று பல காட்சிகளை நான் கற்பனை செய்து பார்த்தேன். எழுத்தின் மூலமாகவே வனத்தை நமக்கு காட்டுகிறார் எழுத்தாளர். ஒரு வேட்டைக்காரனின் துப்பாக்கியை வர்ணிக்கும் விதமே நாமும் வேட்டையாடலாமோ என்கிற ஆசையை தூண்டுகிறது. வனத்தில் வேட்டைக்

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 6, 2025


தெலுங்கு மொழிபெயர்ப்பில் தமிழ் சிறுகதைகள்
நண்பர் ஸ்ரீனிவாஸ் தெப்பல தெலுங்கிலிருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து தெலுங்கிற்கும் தொடர்ந்து மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறார். தமிழின் சமகால சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை ஒரு தொகுப்பாக சமீபத்தில் அவர் தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். ( இந்த தொகுப்பில் எனது ஒரு துண்டு வானம் கதையும் உள்ளது.) அந்த நூலுக்குத் தொடர்ந்து நல்ல அறிமுகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. நமக்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளோடு நிகழ்ந்த உரையாடல் அளவிற்கு தெலுங்கு மொழியோடு நிகழவில்லை. அந்த

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 2, 2025


இந்திய சிறுகதைகள் - ஓர் அறிமுகம் ( புதிய நூல் )
‘சமகால இந்தியச் சிறுகதைகளின் கதைக்களமானது, நம் நாட்டின் நிலவியல் மற்றும் சமூகவியல் வேறுபாடுகளைப் போலவே, மிக விரிவானதும், பன்முகத்தன்மை கொண்டதுமாக இருக்கிறது. ஒருவகையில், இதுவே ஒரு முழு உலகம் போல் உள்ளது.’ - சிசில்குமார் தாஸ் கவிஞர் ஸ்ரீஷங்கரைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு நிலவெளி மாத இதழ் தொடங்கப்பட்டபோது என்னிடம் ஒரு தொடர் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தனர். நீண்ட காலம் சிறுகதைகள் எழுதாமலிருந்த அந்த காலகட்டத்தில் எனக்கு விருப்பமான இந்தியச் சிறுகதைகளை அந்தத் தொடரில் அறிமுகப்படுத்

லக்ஷ்மி சரவணகுமார்
Dec 1, 2025


பன்றிவேட்டை நாவல் உரையாடல் - காணொளி
நண்பர் சிறகன் ஒருங்கிணைப்பில் கடந்த 22 ம் தேதி இணைய வழியில் உரையாடல் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது. எழுத்தாளர்கள் அ.வெண்ணிலாவும், கார்த்திகைப்பாண்டியனும் நாவல் குறித்து தங்களது கருத்துகளை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இரண்டு மணி நேரம் நிகழ்ந்த இந்த நிகழ்வில் குறைவான நபர்களே கலந்துகொண்ட போதிலும் உரையாடல் ஆரோக்கியமானதாக இருந்தது. ரூஹ், கொமோரா, கானகன் என எனது பிற நாவல்களிலிருந்து தனது உரையைத்துவங்கிய எழுத்தாளர் வெண்ணிலா கானகனுக்கும் பன்றிவேட்டைக்கும் இருக்கும் தொடர்புகளைக்

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 26, 2025


கொமோரா நாவலிலிருந்து சிறிய பகுதி
Children village - 1 எல்லாம் இங்கிருந்து துவங்கியதுதான். வன்மம், ஏமாற்றம், பசியென எல்லாவற்றுக்கும் பால்யத்திலேயே பழக்கப்படுத்தின சூன்யப்பேழை அந்த விடுதி. இன்னொரு வயிற்றுக்குக் கூடுதலாக உணவைத் தேடுவதன் சிரமத்திலிருந்த கதிரின் அம்மா தனக்குத் தெரிந்தவர்களின் மூலமாய் இந்த விடுதியில் கொண்டு வந்து சேர்த்தாள். கதிர் அப்பாவை வெறுக்கத்துவங்கியதும் இங்கிருந்துதான். வீட்டிற்கு பொறுப்பாய் அந்த மனிதர் இருந்திருந்தால் இவன் சபிக்கப்பட்ட இந்த விடுதிக்கு வந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 25, 2025


ஹரிகிஷன் கவுலின் ‘ஞாயிறின் ஒளி’
ஸ்ரீநகரில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ஹரிகிஷன் கவுல் கஷ்மீரி புனைவிலக்கியத்தில் தனித்துவமான எழுத்தாளர். எப்போதும் ஊடகங்களாலும் ராணுவத்தாலும் கண்கானிக்கப்படும் ஒரு நிலத்தில் வாழ்கிறவர்களது மனநிலை நிலையானதாக இருப்பதில்லை. வன்முறைக்கு நடுவே பல தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் கதைகள் ஏதாவதொரு சார்புடனேயே இருக்கிறது. கஷ்மீர் மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வன்முறை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதல்ல. மிக நீண்ட வரலாறும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்ட

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 22, 2025


நம் நண்பர்களை நாம் எவ்வாறு பார்க்கிறோம்?
சில வருடங்களுக்குமுன் நடந்த சம்பவம். சென்னையில் ஒரு தம்பியின் திருமணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக விமானத்தில் கிளம்பி மதுரையில் நடக்கும் எனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டும். குறைவான உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவசரமாக விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமானத்திற்கான காத்திருப்பில் தற்செயலாக எனது ஊரைச் சேர்ந்த பால்யகால நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. என்னைவிட சில வருடங்கள் மூத்தவர் என்றாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியதால் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பழக்

லக்ஷ்மி சரவணகுமார்
Nov 19, 2025
bottom of page