top of page



சுவாரஸ்யமாக எழுதினால் நல்ல இலக்கியம் இல்லையா?
“இலக்கியம்” என்ற சொல்லைச் சுற்றி உருவாகியிருக்கும் மிகப் பழைய நம்பிக்கையில் ஒன்று, சுவாரஸ்யமாக எழுதப்படுவது நல்ல எழுத்து இல்லை என்பதுதான். ஒரு படைப்பு வாசகனை வேகமாக வாசிக்க வைத்தாலோ, அடுத்த பக்கத்தைத் திருப்ப வேண்டும் என ஆர்வப்படுத்தினாலோ அது வெகுஜன எழுத்தின் பண்பு. ஆனால் ஒரு படைப்பை வாசிக்கும்போது வாசகன் சிரமப்படுகிறான், உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அது தீவிர இலக்கியம். இவ்வாறான ஒரு மனப்பிரிவு நம் சூழலில் நீண்டகாலமாக இருக்கிறது. இந்த மனநிலைக்குப் பின்னால்

லக்ஷ்மி சரவணகுமார்
Sep 2


அல்லி பாத்திமாவின் பாண்டிச்சி
( 2022 ம் வருடம் எழுதப்பட்ட கட்டுரை) ஜீரோ டிகிரி நாவல் போட்டிக்கு நடுவராக இருந்தபோது அல்லி பாத்திமாவின் செல்லக்கருப்பி என்னும் நாவலும் போடிக்கு வந்திருந்தது. அதன் எளிமையும் மொழியின் அலங்காரங்களுக்குப் பின்னால் ஓடாத இயல்புத்தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது. தான் சொல்ல நினைத்தக் கதையைச் சரியாக சொல்ல வேண்டுமென்கிற கவனத்துடனும் அந்தக் கதாப்பாத்திரங்களை வாசிக்கிறவர்களின் கண்முன்னால் உயிர்ப்போடு நிறுத்தவேண்டுமென்கிற மெனக்கெடலும் அதில் இருந்தது. அந்த நாவல் போட்டியில் பரிசு வெ

லக்ஷ்மி சரவணகுமார்
Sep 1


மேடைக்கு வந்த காகங்கள் - OMNIA
இசையின் எந்த அடிப்படைகளும் தெரியாத தற்குறி நான். ஆனால் ரசனையின் பெயரில் நிறையக் கேட்பதுண்டு. நண்பர்கள் பரிந்துரைப்பதன் வழியாகக் கேட்பது பின் அந்த இசைக்குழுவின் விருப்பமானவர்கள் யாரெனத் தேடிப்பிடித்து அவர்கள் சொல்கிற குழுவையும் கேட்பது. இப்படித்தான் எனக்கு விருப்பமான ஒரு சிறிய வரிசையை வைத்திருக்கிறேன். 2012 ம் வருடம் அப்படி தற்செயலாக கேட்டுப் பிடித்துப்போன இசைக்குழுதான் OMNIA. எனது பழைய முகநூல் கணக்கில் அந்தக் குழுவின் பாடல்களைக் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். நான் எழுதிய

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 31


ஃபனா
நேற்று பின்னிரவு வேலைகளுக்கு நடுவே நூருல் ஹஸன் என்பவர் எழுதிய நூர் என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நூர் என்ற சொல்லின் மீது எனக்கு என்றென்றைக்குமான ப்ரேமை உண்டு. என் முதல் காதலியின் பெயர். காதலென்று சொல்லுக்கு பொருளே தெரியாத வயதில் வந்ததாலோ என்னவோ அந்த விருப்பம் அழகானதாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கிறது. இந்த நூலில் அந்த இளைஞன் தனது வாழ்வில் எவ்வாறு ஓர் இறை அனுபவத்தை அடைந்தேன் என்பதைப் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று சொல்ல முடியாத

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 30


பணிக்கர் பேத்தி: ஸர்மிளா செய்யித்
( 2020 ம் வருடம் எழுதிய கட்டுரை. ) ஸர்மிளா செய்யித்தின் உம்மத் வெளியானபோது அதை வாசித்து நான் எழுதியிருக்கிறேன். கிழக்கு இலங்கையின் இஸ்லாமிய வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாவல், ஒரு சமூகத்தின் மத அடையாளத்தை மட்டும் பதிவு செய்வதாக இல்லாமல், அந்த சமூகத்துக்குள் வாழும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, உறவுகள், நம்பிக்கைகள், முரண்பாடுகள், பெண்களின் நிலை, குடும்ப அமைப்பு, நிலத்துடனான உறவு என பல்வேறு அடுக்குகளைத் திறந்துகாட்ட முயன்றது. அந்த நாவலை வாசித்தபோது உருவான எண

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 29


இயக்குனர் ஷங்கருடன் ஒரு உரையாடல்.
1. 2.0 படத்திற்கான கரு எங்கிருந்து, எப்போது உருவானது? ஒவ்வொரு படத்தின் கதைக்குமான ஆரம்பப்புள்ளி எனக்கு சுவாரஸ்யமானது. நாம் தேடிக் கொண்டிருப்பது நம்மைத் தேடிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்களே அப்படித்தான் பல சமயங்களில் கதைகளும் உருவாகின்றன. ஐ படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளின்போது சிலக் காட்சிகள் அவ்வப்போது மனதில் தோன்றி மறைந்த வண்ணமிருந்தன. நெடுஞ்சாலை முழுக்க செல்ஃபோன்கள் ஒரு ஆற்றைப் போல் ஓடும் காட்சி முதலில் மனதில் உதித்தது. அதைத் தொடர்ந்து ஒரு நீச்சல்குளத்தில் அதன் ச

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 29


ஆகூழ் - ஒரு கிராமம் வரலாறு ஆகும் கதை.
ரமா சுரேஷ் தனது முந்தைய நாவலான அம்பரத்திலிருந்து முற்றிலும் துண்டித்துக்கொண்டு புதிய களத்துக்குள் பயணித்திருக்கிறார். கதைமொழியிலும் கதாப்பாத்திர உருவாக்கத்திலும் இந்த நாவல் தனிச்சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறது. கீழ் தஞ்சை மாவட்டமான ஆம்பலாப்பட்டு என்னும் கிராமத்திலிருந்து சிங்கப்பூருக்கு பிழைக்குச் செல்கிறவர்கள் அங்கு ஏகாத்தியபத்யத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுப்பதன் வழியாக அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். இந்த நாவலைப் புரிந்துகொள்ள கணபதியின் அரசியல் வாழ்க்கையை மட்

லக்ஷ்மி சரவணகுமார்
Aug 21


எனக்கு ஒரு அடையாளம் உண்டு. ஆனால் அது விற்பனைக்கல்ல.
அகழ் மின்னிதழில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் மொழிபெயர்ப்பில் உம்பர்த்தோ ஈகோவின் திரவநிலை சமூகம் குறித்த கட்டுரை ஏராளமான கேள்விகளை எழுப்பியது. குடும்பம், சமூகம், இலட்சியங்கள் போன்ற திடமான அமைப்புகளிலிருந்து மனிதர்கள் படிப்படியாக விடுபட்டு, நிரந்தரமற்ற அடையாளங்களைக் கொண்டவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் அதீத நுகர்வுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்; மறுபுறம் எந்த உறுதியும் இல்லாத வாழ்க்கை முறையை வாழ வேண்டியிருக்கிறது. இந்த இரண்டிற்கும் நடுவே சிக்கிக்கொண்டு தன்ன

லக்ஷ்மி சரவணகுமார்
Jul 25


நீங்கள் ஒரு காதல் படம் எடுப்பீர்களா?
கோடானகோடி நன்றிகளை தமிழ் சமூகத்திற்குச் சொல்லிக் கொண்டு நீண்டநாட்களுக்குப்பின் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆறு வருடகாலம் காத்திருந்த நாள் வந்தது. லிங்கம் வெளியாகி வாழ்த்து செய்திகளும் அலைபேசி அழைப்புகளும் மனதை நிறைத்திருக்கின்றன. இந்த பெரும் வெற்றி நானே எதிர்பாராதது. ஆனாலும் இந்தத் தருணத்தில் என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விளக்கிவிட இயலாது. முதலில் என்னோடு இந்த நீண்ட பயணத்தில் உடனிருந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். ஒரு இயக்குன

லக்ஷ்மி சரவணகுமார்
Jun 28


Guns and thighs - ராம் கோபால் வர்மா
ரெண்டாம் ஆட்டம் தொடர் எழுதுவதற்கு முன்னால் மதுரையின் பிரபலமான முன்னாள் ரவுடிகளை சந்தித்து உரையாட நேர்ந்தது. அப்பொழுது நீங்கள் ரவுடியானதற்கு எது தூண்டுதலாக இருந்தது எனக் கேட்டபோது சொல்லி வைத்தாற்போல் அவர்களில் சிலர் சொன்னக் காரணம் ராம் கோபால் வர்மாவின் சிவா திரைப்படம். தமிழில் டப்பிங் செய்யப்பட்ட வெளியிடப்பட்ட அந்தத் திரைப்படம் இங்கு பெரும் வெற்றி கண்டது. அந்தத் திரைப்படத்தில் சைக்கிள் செயினை உருவி நாகார்ஜூனா சண்டையிடும் காட்சி சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று. ர

லக்ஷ்மி சரவணகுமார்
May 31
bottom of page